ஒரு சிறிய சிட்டு குருவி பறந்து பறந்து.. இரைகிடைக்காததால் சோர்ந்து போய் பறக்கமுடியாமல் மயங்கி விழுந்தது.. அப்போது அவ்வழியே சென்ற பசு.., சாணத்தை அந்த குருவியின் மீது போட்டுவிட்டுச் சென்றது.. சாணத்தின் வெதுவெதுப்பில் குருவி உணர்வு பெற்று கீச்.. கீச்.. என்று கத்தியது.. அந்த பக்கமாக வந்த கழுகு ஒன்று குருவியின் சத்தம் கேட்டு சாணத்தை கிளறிக் குருவியை கொத்திப் போனது..!
புரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் மீது சாணத்தை வீசுபவர்கள் உங்கள் எதிரியும் அல்ல.. அதில் இருந்து மீட்டு எடுப்பவர்கள் நண்பர்களும் அல்ல..!
Aucun commentaire:
Enregistrer un commentaire