mardi 17 janvier 2012

நான் ஒரு சுத்தமான கண்ணாடி.


ஒருமுறை புத்தரை,இளைஞன் ஒருவன் சந்தித்தான்
அந்த இளைஞனுக்கு இவர்தான் புத்தர் என்று தெரியாது
புத்தரின் முகத்தில் இருந்த ,பிரகாசமும்
தோற்றத்தில் இருந்த பொலிவும்,
அந்த இளைஞனைப் புரட்டிப் போடும் அளவுக்கு கவர்ந்துவிட
பரவசப்பட்டுப்போன அவன் ,புத்தரிடம் கேட்டான்
"நீங்கள் கந்தர்வ லோகத்தை சேர்ந்தவரா?"
புத்தர் "இல்லை" என்று பதில் சொன்னார் .
"அப்படி என்றால் தேவலோகத்தில் இருந்து வருகின்றீர்களா?"என்று கேட்டான்
புத்தர் "இல்லை"என்றார்
"பின்னே இந்த பூலோகத்தைச் சேர்ந்த மனிதர்தானா?"என்றான்
புத்தர் "இல்லை"என்றார்
இளைஞன் பொறுமை இழந்துவிட்டான்
"பின்பு யார்தான் நீங்கள்?"என்றான்
"இந்த கேள்வியை ஆரம்பத்திலேயே கேட்டிருக்கலாமே இளைஞனே?"
என்று சொல்லிவிட்டு,புத்தர் சொன்னார்
"நான் ஒரு சுத்தமான கண்ணாடி "
புத்தரின் இந்த வாக்கியம் மிகவும் பிரசித்தமானது.
இதன் அர்த்தமோ மிகவும் ஆழமானது

"திறமைசாலி" என்று நம்மை ஒருவர்,ஒரு வார்த்தை பாராட்டினால்
நாம் என்னவெல்லாம் நினைக்கிறோம்?
"இவன் நம்மை அறிவாளி என்கின்றான் "
"விஷயம் தெரிந்தவன் என்கின்றான்"
"புத்திசாலி என்கின்றான்"
"சாணக்கியன் என்கின்றான்"
"வித்தை தெரிந்தவன்என்கின்றான் "
"நம் அறிவை இவன் வியக்கிறான்"
என்று, அவன் சொன்ன ஒற்றை வார்த்தையின்மீது,
ஓராயிரம் புகழ் வார்த்தைகளை அடுக்கிப்பார்த்து மகிழ்ந்து போகிறோம்
அதே போலவே "முட்டாளே ......"என்று யாராவது நம்மை திட்டிவிட்டால்
இந்த வார்த்தையின்மீது ஓராயிரம் இகழ்வார்த்தைகளை அடுக்கிப்பர்த்து
சோர்வடைந்து விடுகிறோம்
ஆனால் புத்தர் சொன்ன மாதிரி ,
நாம் வெறும் கண்ணாடியாக மட்டும் இருந்தால் ,
எதிராளி சொன்ன வார்த்தைகளை மட்டுமே பிரதிபலிப்போமானால்
"வார்த்தைகளில், எழுத்துக்களில் இருக்கிற
இண்டு இடுக்குகளில் எல்லாம் புகுந்து,
சொல்லப்படாத அர்த்தங்களைத்
தேடிக்கொண்டிருக்க மாட்டோம் ..

அன்புடன் தபோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire