ஒரு நாள் புத்தரிடம் அவருடைய சீடர், ""எவர் வேண்டுமானாலும் முக்தி அடையலாம் என்று நாள்தோறும் உபதேசம் செய்கிறீர்கள். இது எப்படி சாத்தியம் ஆகும்?'' என்று கேட்டார்.
"நல்லது! நீ இந்த ஊரில் உள்ள ஒவ்வொருவரிடமும் சென்று அவர்களின் விருப்பம் என்ன என்பதை அறிந்து வா!'' என்று அனுப்பினார். சீடரும் ஆர்வத்துடன் ஊர்முழுக்க விசாரித்துவிட்டு புத்தரிடம் வந்தார்.
"குருவே! மக்கள் அனைவரின் விருப்பமும் சொத்து, சுகம், பதவி, பணம் என்று தான் இருக்கிறதே ஒழிய யாரும் முக்தியை விரும்புவதாய் தெரியவில்லை'' என்று சொன்னார்.
"பார்த்தாயா? எந்த விஷயத்திலும் முதலில் ஆர்வம் இருந்தால் தான் அதைப் பற்றிய தேடுதல் உண்டாகும். எதை விரும்புகிறோமோ அதைத் தான் அடைய முடியும். பொருளைத் தேடுபவன் பொருளை அடைகிறான். ஆனால், உலகில் உள்ள அனைவரும் முக்தியடையத் தகுதி பெற்றவர்கள் தான். ஆனால், யாரும் அதை மனதால் கூட விரும்பத் தயாராய் இல்லை. அவ்வளவு தான்!'' என்று பதில் அளித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire