lundi 2 janvier 2012

சிறந்த சீடர்.

புத்தரின் சீடர்களில் முதல்மையானவர் காஸியபன். அவரைத் தம்மபதம் மஹாகாஸியபன் என்று குறிப்பிட்டுப் போற்றுகிறது. புத்தரின் தர்ம மார்க்கத்தைப் பரப்பப் புத்தராலேயே அனுப்பப்பட்டவர் அவர். எங்கிருந்த போதும் புத்தர் இருக்கும் திசை நோக்கிக் கை கூப்புவார். தரையில் விழுந்து வணங்குவார் அவர். மக்கள் ஆச்சரியப்படுவார்கள். "ஐயா.. தாங்களோ ஞானம் பெற்ற குரு.. தாங்கள் ஏன் இன்னமும் வணங்குகிறீர்கள்..?" என்று அவரிடம் அதிசயமாக வினவுவார்கள். "உங்களுக்கு புரியாது.. ஒரு புழுவை அழகிய வண்ணத்துப் பூச்சியாக்கியவர் அவர்தான்..! அவர் உள்ளவரை அவரை வணங்காமலிருக்க என்னால் முடியாது தவிரக் குரு என்பதோ சீடன என்பதோ அரசன் ஆண்டி என்ற ஏற்றத்தாழ்வு கொண்டது அல்ல.. அது எப்படியாயினும் அவர் இருக்கும் திசை நோக்கி  வணங்காமல் என் நாள் துவங்குவதே இல்லை..!" என்று பதில் சொல்வார் அவர்.

                                                        புத்தரின் இறுதி நெருங்கியது.. மகா காஸியபனை அழைத்து வர ஆணையிட்டார் புத்தர். சீடர்கள் பல திசையிலும் தேடி விரைந்தனர்..

                                          புத்தர சொன்னார்.. "ஆனந்தா.. காஸியபன் என்னைப் பிரிய விரும்பவேயில்லை.. நான் தான் அவனை அனுப்பினேன்.. அவன் அறியாலல் நான் இந்த உலகை விட்டுப் போகக்கூடாது என்று அவன் கேட்டுக் கொண்டான்..! நான் நாளை புறப்பட்டு விடுவேன்..! நாளை அதிகாலைக்குள் அவன் வராவிட்டால் நான் மரணத்திடம் சற்று நேரம் தாமதிக்கும்படி கெஞ்சவேண்டும்..! நான் யாரிடமும் எதுவும் கேட்டதேயில்லை.. ஆகவே அவனை விரந்து அழைத்து வர ஏற்பாடு செய்..!"

                காஸியபன் வந்து சேர்ந்ததும்.., புத்தர் மகிழ்ச்சியுடன்.., "காஸியப்பா.. நீ வருவாய் என்று நான் அறிவேன்.. என்னைச் சங்கடப்பட விடாமல் வந்து விட்டாய்.. நல்லது.. மரணமே..இனி நீ வரலாம்..!" என்றார்.

                                       புத்தரின் அத்தனை சீடர்களும் சுற்றி நின்று பாத்திருக்க.., மகாகாஸியபனின் மடியில் புத்தரின் உயிர் பிரிந்தது.. எவருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம் எப்படி அவருக்கு கிடைத்தது..

                                                             காஸியபர் மட்டுமே கடைசி வரையிலும் சீடராகவே விளங்கினார்.. மற்றவர் வெளியே சென்றதும் அவரவரும் குருவாக மாறினார்கள்.. அதனால் தங்கள் குருவை மறந்தனர்.. அவர் வெளியே போனபின்பும் சிறந்த சீடராகவே இருந்தார்.. இப்போது புத்தருக்குப் பின் அவரே குரு..!

                       குரு என்பது ஒரு பொறுப்பு.. பெரும் பதவியல்ல.. அதை அடைய துடிக்க வேண்டிய அவசியம் இல்லை.. தகுதி உள்ளவர்க்கு தானே வரும்..! 

அன்புடன் தபோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire