mardi 3 janvier 2012

சமநிலை.

                                  ஒருவர் தன்வீட்டில் பூனையொன்றை வளர்த்து வந்தார்.. ஒரு நாள் எலியை பிடித்து கொன்று தின்றபோது மிகமகிழ்ச்சி யடைந்தார்.. அடுத்தநாள் அவர் அன்பாய் வளர்த்துவந்த கிளியை திடீர்என பூனை கவ்வி கொன்றது.. காப்பாற்வதற்குள் அந்த கிளி இறந்து போனது.. மிகவும் வேதனைப்பட்டு பூனையை திட்டி தீர்த்தார்... அழுது புலம்பினார்.. என்னொருநாள் முற்றத்தில் நின்ற சிட்டு குருவியை பாய்ந்து கவ்வி கொன்றதை கண்டார். அப்போதுதான் பூனை எதையாவது கவ்வி கொன்று தின்னும் என்பதை உணர்ந்தார்..


                                            இங்கே இவரை கவனித்தீர்களா.. தனக்கு எதிரியான எலியை கொன்றபோது மகிழ்ந்தும்.. தனக்கு அன்பான கிளியை கொன்றபோது வேதனையடைந்தும்.. தனக்கு வேண்டாத சிட்டுகுருவியை கொன்றபோது அது பூனையின் இயல்பு என்றும் கவலையோ மகிழவோ இல்லை. இதுதான் நாம்.. எமக்கு வேண்டாதவைக்கும் வேண்டியவைக்கும் இழக்கும் போது மகிழ்ச்சியும் வேதனையும் அடைகிறோம்.. இது உலக இயல்பு என்பதை உணர்ந்து கொண்டால் நாம் இன்பத்துக்கு இன்ப படாமலும் துன்பத்துக்கு துன்ப படாமலும் யை அடையமுடியும்..


அன்புடன் தபோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire