samedi 7 janvier 2012

நான் என்னோடு சில நிமிடங்கள்.

(இந்த கட்டுரைக்குள் நீங்கள் போகும் முன் நான் சிலவற்றை கூறவேண்டும்.. இது ஆத்மஞானத்தை ஒரு எளிய நடைமுறையில் விளங்கி கொள்வதற்கான என் சிறுமுயற்சி.. லெளகீகமான வாழ்விலே மகிழ்ச்சியும் திருப்தியும் காண்பவர்கள் இதோடு நிறுத்தி கொண்டு வேறு பக்கம் திரும்புவது நல்லது.. ஏன் எனில் இதை உங்களால் புரிந்து ஏற்று  கொள்வது மிகவும் கடினம். மேலே செல்லும் என் ஆன்மீகநண்பர்கள்..நான் என்னோடு பேசிவதாய் எண்ணிகொள்ளாமல் நீங்கள் உங்களோடு பேசுவதாய் எண்ணி மகிழ்ச்சியாக செல்லுங்கள்..)

தாயின் கருவறையில் இருந்து வந்து கண்கள் திறந்ததும்  இந்த உலகைக் கண்டேன்.. எனக்கென அம்மா, அப்பா, சகோதரர், உறவினர், நண்பர்கள் ஆசிரியர் என பலர் சூழ என் உலகம் சுழன்று எந்த கவலையும் இன்றி அந்த குழந்தை பருவம் கடந்தும் போனது..!
                     
அதன்பின் வாழ்வின் பல இன்பதுன்பங்கள் வந்துபோக உலகை அறிந்து வென்று விட்டதாய் இந்த நிலையில் நின்று  நான் என்னோடு சில நிமிடங்கள் பேசுகிறேன்..!

நான் அனைத்தும் அறிந்து  விட்டேன்....!

இல்லை..! நீ சொல்வது பொய்.. அப்படியானால் ஏன் இன்னமும் உன் மனம் அச்சத்திலும் முழுமை அடையாத போராட்டங்களாகவே உள்ளது..? நிம்மதி ஏன் அவ்வப்போது வந்து மறைகிறது.. அந்த மகிழ்சியான உன் பிஞ்சு குழந்தை பருவம் ஏங்கே போனது..?

இந்த பெரிய உடல் பெற்றதால் அது தொலைந்து போனது..!

தினமும் நீ உண்ட உணவு கொடுத்ததுதானே இந்த உடல்..

ஆம்..ஆனால் என்னுடைய உணவுதானே..?

இல்லை.. அது இந்த பூமியுடையது.. பூமி கடன் கொடுத்த உணவின் இருப்பிடமான
உன் உடலை பிணமாக வாங்கிறதே..!

அப்படியால் இந்த உடல் எனதல்ல என்பது உறுதி.. அப்படியானால் மனம்தான் நானா.. ?

இல்லை இல்லை..அது எப்படி சாத்தியம்..உன் உடலின் புலன்களால் புகுந்தவைதானே உன் மனதில் இருக்கிறது.. நீ பார்த்ததும் கேட்டதும் படித்ததும் நுகர்ந்ததும் சுவைத்ததும் என ஏராளமாய் இருக்கிறது.. ஆழமாய் பார்.. அவை உன் சமூகத்தில் உன்னை கடந்து போனவர்கள் போட்ட குப்பைதொட்டியாகத்தான் இருக்க முடியும்..

ஆம் அதிலும் என்னை காணவில்லை.. ஞானியர்கள் சொன்னது சரிதான்.. மனிதன் தன்னை தானே வருத்தி கொள்கிறான் என்பது.. அது நான் இல்லாத மனம்தான்.. அப்படியானால் நான் என்பதே சுயமாக இல்லையா..?

ஏன் இல்லை.. இருக்கிறதே.. இல்லாவிட்டால் தூக்கத்தில் உன் புலன்களுடன் மனமும் தூங்கியபின்.. எப்படி உன்னால் அங்கே உயிரோடு இருக்க முடிகிறது.. ஆம்.. அதுதான் உன்னுடைய சுயமான நான்.. ஆனால் தூங்கிக்கொண்டு இருக்கிறது..

ம்.. அறிவுக்கு எட்டினாலும் அனுபவத்தில் உணர முடியவில்லையே..?

ஏன் முடியாது அதற்குதான் பகவான் ரமணர் ,புத்தர் போன்றோரின் வழி இருக்கிறதே..!   

ஆனால் அந்த வழியில் சென்றால் என் கடமை என்னாவது.. என்னை நம்பி இருப்பவர்கள் என்னாவது..? அதை மரணம் நெருங்கும் போது பாக்கலாம்..

உன் மரண திகதி கையில் வைத்திருக்கிறாயா.. தினமும் உன் மரணம் நெருங்கிறது.. நினைவு இருக்கட்டும்.. பறவாய் இல்லையா..? இந்த உலகில் வாழ்ந்த பல கோடி பேர்களை திரும்பி பார்..! மரணத்தின் போது பிறந்தோம் உண்டோம் தூங்கினோம் இனம்பெருக்கினோம் இப்போ எங்குபோகிறோமென தெரியாமல் பயந்த படியேதான்  போய் இருக்கிறார்கள்.. இதற்கு எதற்கு உனக்கு உயர்ந்த மனிதபிறவி..? இதை உன்னை விட அற்ப பூச்சிகள் சிறப்பாக செய்கிறதே..?

ஏன்  அடுத்தவர்களுக்கு சேவை செய்வதற்காக இருக்காதா..?

ஆம்.. அது உயர்ந்ததுதான் .. ஆனால் நீ மரணத்தை தொடும் போது நீயும் இங்கே வாழ்ந்து விட்டு போன பலகோடி பேர்களில் ஒருவனாய் தானே  மரணிப்பாய்..  புத்தர் போன்ற மகான்கள் கூட சேவைசெய்வதை விட தன்னை காண்பதிலேயே தன்னை அர்ப்பணித்து இருக்கிறார்கள்.. உழைத்து அடுத்தவர்களுக்கு கொடுப்பதே சிறந்தாக இருந்து இருந்தால் அவர்கள் எழிதாய் செய்திருக்க முடியுமே.. அதை பொருட்படுத்தாமல் ஏன் பிச்சை பாத்திரம் ஏந்த வேண்டும்.. அதைவிட தனது ஆன்மாவை அறிவதே உயர்வு என்பதால் தானே..  அதனால்தான் பலகோடிபேர் வாழ்து விட்டு போன உலகில் தன் உடலுக்கு மரணத்தை கொடுத்து விட்டு போனார்கள் அவர்கள்.. நீயும் அதை அறிய வேண்டாமா..?

அது என்னால் முடியுமா..?

ஆம் உன்னாலும் முடியும்.. அதற்கு தேவையான ஆர்வம் தான்
உன்னிடம் அதிகம் இருக்கிறதே..!

அன்புடன் தபோ..

Aucun commentaire:

Enregistrer un commentaire