lundi 2 janvier 2012

கணப்பொழுது

கெளதம புத்தர் மரத்தடியி நிழலில் சாந்தமாக இருந்தார்.. அவரை சுற்றி சீடர்கள் உற்கார்ந்து அவர்  முகத்தையே பார்த்து கொண்டு இருந்தனர்.. மெளனம் கலைத்ததாய் புத்தர் அவர்களை பார்த்து ஒரு கேள்வியை கேட்டார்.

                      "ஒரு மனிதனின் ஆயுள் எவ்வளவு காலம்..?"
                                   
சீடர்கள் குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர். அதிலும் இப்படி புத்தர் ஏன் திடீரென இப்படி ஒரு சாதாரண  கேள்வியைத் தங்களை பார்த்து கேட்க வேண்டும் ? எது எப்படி என்றாலும் கேள்விக்கு பதில் அளித்தாக வேண்டுமே..
                              
                               "எழுபது வருடங்கள்..!" என்றான் ஒரு சீடன்.
                              
                               "தவறு..!" புத்தரின் குரல் மென்மையாக வந்தது.
                              
                                "அறுபவது வருடங்கள்.." என்றான் மற்றோரு சீடன்.
                             
                                 "இதுவும் தவறு..." அதே இனிய குரலில் புத்தர்.
                                                                 
                        இவை அனைத்தும் அதிகம் போலும் என எண்ணிய வேறொரு சீடன் "ஐம்பது வருடங்கள்.." என்றான்.
                                      
                               "இதுவும் தவறு.." என்று புன்னகை பூத்தார் புத்தர்.

                            சீடர்களுக்கு எதுவும் விளங்கவில்லை..சிறிது நேரம் அவர்களையே பார்த்து கொண்ருந்த புத்தர்..,

                               "ஒரு மூச்சு விடும் நேரம்..!" என்றார் புன்முறுவலுடன்.

                           சீடர்கள் வியப்படைந்தனர்.. !"மூச்சு விடும் நேரம் கணப்பொழுது தானே..!" என்றான் ஒரு சீடன் ஆச்சரியத்துடன்.

                                            "உண்மை.. மூச்சு விடும் நேரம் கணப்பொழுது தான்..! ஆனால் வாழ்வு என்பது மூச்சு விடுவதில்தான் உள்ளது..! ஆகவே ஒவ்வொரு கணமாக வாழவேண்டும்..! அந்த கணத்தில் முழுமையாக வாழவேண்டும்..!"  என்றார் அதே புன்முறுவலுடன் புத்தர் பெருமான்.

உண்மைதானே.. நாம் கடந்த கால மகிழ்ச்சியிலும்.. எதிர்கால அச்சத்திலும்.. வாழ்கிறோம்.. அதிலே பல கோட்டை விட்டவர்களே நாம். ஆனால் ஞானிருக்கோ நேற்று இறந்து போனது.. நாளை காணவே முடியாது.. நிகழ்காலம் மட்டுமே நமது ஆழுமைக்கு உற்பட்டது என்பதை ஆழமாக உணர்ந்தவர்கள் அவர்களே..!

அன்புடன் தபோ. 

Aucun commentaire:

Enregistrer un commentaire