mercredi 4 janvier 2012

உன்னையறி.

அமெரிக்க பாடசாலைஒன்றில் எட்டரைவயது சிறுவனை "இது அடிமுட்டாள் பாடசாலையில் இருந்தால் மற்றமாணவர்களையும் இது கெடுத்து விடும்.. இனி இவனுக்கு பாடசாலையில் அனுமதி இல்லை" என்று ஒர் கடிதம் எழுதி அந்த சிறுவனின் சட்டைப்பையில் வைத்து ஆசிரியர்களால் விரட்டப்பட்டது. தாயார் கவலை கொள்ளாமல் வீட்டில் வைத்து பாடங்களை கற்று கொடுத்தார். தாய்யின் கல்வியிலே வளர்ந்த சிறுவன்.. பின்னாளில்  ஆராட்சிகளில் ஈடுபட்டு   விஞ்ஞானியானார்.

இன்றும் அக்டோபர் 21ம் திகதி மாலை 9:59க்கு வீதி பயணவிளக்குகளை தவிர மிகுதி மின்சார விளக்குகள் அனைத்தையும்அணைத்து ஓருநிமிடம்அமெரிக்காவை இருளாக்கி விட்டு மீண்டும் ஒளிரவிட்டு தொலைக்காட்சி, வானொலியில் அறிவிப்பார்கள் இப்படி.. "எடிசன் பிறந்திருக்கா விட்டால் உலகம் இப்படிதான் இருந்து இருக்கும்.." என்று.

மேலே நான் கூறிய அந்த முட்டாள் சிறுவன் தான் பின்னாலில் விஞ்ஞானிகளின் தந்தை என போற்றப்படும் தாமஸ் அல்வா எடிசன் ஆவார். ஆகவே நண்பர்களே..நீங்களும் அடுத்தவர் அபிப்பிராயத்தில் வாழ்வதை விட்டு விடுங்கள்.. உங்களை நீங்களே நிர்ணயபடுத்துங்கள். உங்களிடம் திறமை இருக்கிறது.. அதை பட்டை தீட்டுங்கள்.


1 commentaire: