mercredi 4 janvier 2012

சுமைகளையும் சுகமாக்குங்கள்.

               ஜென் குருக்கள் தங்களின் தனிப்பட்ட தன்மையில் ஜென் மார்க்கத்தை பரப்வுவது அவர்களின் சிறப்பு . அதனால் ஒவ்வொரு குருக்களுக்கும் தனிச்சிறப்பு இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். அதில் ஜென்குருவான ஹீயூட்டி என்பவரின் எனக்கு மிகவும் பிடித்த  ஒரு சம்பவத்தைதான் உங்களுக்கு கொண்டு வந்து இருக்கிறேன்.

                                                 ஹீயூட்டி யாருக்கும் போதனைகள் கொடுப்பது இல்லை.  ஒரு  பெரியசாக்கு பையை சுமந்து கொண்டு போவார் . அதில் இனிப்புகளே அதிகம் இருக்கும். அவர் போகிற கிராமத்திலும் நகரத்திலும் அவரை குழந்தைகள் சூழ்ந்து கொள்வார்கள். இனிப்புக்களை அந்த குழந்தைகளுக்கு கொடுப்பார். யாராவது போதனை கேட்டால் எதுவும் பேசாது சிரித்துவிட்டு போவார்.

                                                                 ஒரு நாள் இவரது குருவான என்பன் தன்னிடம்   ஜென்னை கற்றுவிட்டு போய் இன்னமும் எதுவரை  ஹீயூட்டி கடைபிடிக்கிறார் என்பதை அறிய அவரை தேடி சென்றார்.அவரை கண்டதும் என்பன் மகிழ்ச்சியோடு  ஜென் என்றால் என்ன..  என்று கேட்டார். உடனே ஹீயுட்டி தன் தோலில் இருந்த சாக்குப் பையை கீழே போட்டுவிட்டு நிமிர்ந்து நின்றார். மகிழ்ச்சி கொண்ட என்பன் அடுத்து ஜென்னின் நோக்கம் என்ன.. என்று கேட்டார்..  ஹீயூட்டி மீண்டும் தன் சாக்குபையை தோலில் போட்டு கொண்டு சிரித்து கொண்டே போனார்.. தன் சீடன் ஜென்னில் பூரணமாய் இருப்பதை அறிந்து புன்முறுவலோடு என்பன் திரும்பினார்.

                                              உங்களுக்கும் புரிந்திருக்கும் அல்லவா.. ஆம் நம்மவர்களும் இதைதான் சொன்னார்கள்.. முதலில் உன் சுமைகளை எல்லாவற்றையும் இறக்கி வைத்து விட்டு.., நீ உன்னை கட்டியிருக்கும் கயிறுகளை அறுத்து விடு.. உன் முழுமையான  சுதந்திரத்தை அடை.. அதன் பிறகு அதனுடைய நோக்கம் உன்  சுமைகளை  மறுபடியும் எடுத்து பார்..  இப்போது  அதிகமான சுமையும் உன்னால் சுமக்க முடியும் என்பதை அறிவாய்..  ஏன் என்றால் இருப்பது போல் இருக்கிறது.. ஆனால் இல்லை என்ற தெளிவு மிகதெளிவாக தெரியுமல்வா உங்களுக்கு..


Aucun commentaire:

Enregistrer un commentaire