samedi 7 janvier 2012

அழகிக்கிழவி.

இராஜராஜ சோழன் இதுவரை யாருமே கட்டாத கோயிலை தான் கட்ட வேணும் என சிற்பிகளை வரவழைத்து கோலாகலமாக கட்டிகொண்டிருந்தான். அருகில் மிகஏழையான அழகிக்கிழவி என்னும் கிழவி வசித்து வந்தார். ராஜா இவ்வளவு பெரிய தொண்டு செய்யும் போது என்னால் எதுவுமே கடவுளுக்கு செய்ய முடியவில்லையே என்று கவலையோடு இருந்தார். அப்பொழுது ஒரு சிறுவன் "கொழுத்தும் வெயிலில் நாக்கு வறண்டு விட்டது கொஞ்சம் மோர் கொடேன்.." என கேட்டு குடித்து விட்டு போனான். உடனே அந்த கிழவிக்கு சிற்பிகளுக்கு மோர்கொடுக்கலாம் என மனதில் ஒன்று பட்டது. அது போலவே தினமும் கோயில் கட்டும் சிற்பிகளுக்கு மோர் கொடுத்து வந்தார்.

சிற்பிதலைவர் கிழவியை பார்த்து கேட்டார் "கொழுத்தும் வெயிலில் எமக்கு மோர் கொண்டுவந்து தருகிறாயே உனக்கு எதாவது நாம் செய்ய வேணும் போல் உள்ளது எதாவது கேள்..?" என்றார். "எனக்கு ஒன்றும் வேணாம் சிப்பியே.. என் முத்தத்தில் ஒரு பெரியகருங்கல் இருக்கிறது அதை இந்த கோயில் கட்டும் பணிக்கு எடுத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்..! என்றார். உடனே சிற்பிகள் அந்த கல்லை யானையால் கட்டிஇழுத்து கொண்டுவந்து கோபுரவிதானத்துக்கு அழகாக அமைத்தார். 

கோவில் கட்டும் பணிநிறைவேறி கும்பாபிஷேகத்துக்கு முதல்நாள் சோழனின் கனவில் சிவபெருமான் தோன்றினார்.. "அழகிக்கிழவியின் நிழலில் நாம் இருப்பதில் பெருமை அடைகிறேன் மன்னா.." என்றார். கண்விழித்த சோழன் காலை யாரந்த அழகிக்கிழவி என்று அறிந்து கிழவியின் குடிசைக்கு சென்று அழகிக்கிழவிடம் "நாம் கட்டிய கோவிலைவிட தமது நிழலில் இருப்பதால் பெருமை என்று கூறினார். என்ன செய்தீர்கள்..?" என்று கேட்டார். கிழவி நடந்தவற்றை விளக்கினார். இறைவன் "அன்பெனும் பிடியினுள் அகப்படும் மலை என்பதை உங்களால் அறிந்தேன்.." என்று கிழவியை வணங்கிவிட்டு புறப்பட்டார் மன்னர். அழகிக்கிழவி ஆனந்தகண்ணீர் வடித்தார்.

இன்று இந்த அழகிழவி குடிசை இருந்த இடத்தில் அழகிக்குளம் என்று கோவிலுக்கு பக்கத்தில் அழியாது நிக்கிறது.
 

1 commentaire:

  1. நான் அறிந்திராத தகவல்.அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள் நண்பரே!

    RépondreSupprimer